“ஜம்மு - காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி” - இஸ்லாமிய அறிஞர்கள் தீர்மானம்!!
“ஜம்மு - காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி” - இஸ்லாமிய அறிஞர்கள் தீர்மானம்!!
காஷ்மீர் மாநிலத்திற்கான 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் பக்கம் நிற்கிறது. ஆனால் பாகிஸ்தான், இந்தியாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்போம் என்று கூறி எதிர்த்து வருகிறது.
திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் 370 நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த கட்சிகளை சேர்ந்தவர்களை பாகிஸ்தான் தலைக்கு மேல் வைத்து கொண்டாடுகின்றது.
இந்த நிலைலயில், இஸ்லாமிய அறிஞர்களின் முன்னணி அமைப்புகளில் ஒன்றான ஜமியத் உலமா இ ஹிந்த் அமைப்பின் பொதுக்குழு கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அனைத்து காஷ்மீரிகளும் எங்கள் சகோதரர்கள். எந்தவொரு பிரிவினைவாத இயக்கமும் நாட்டிற்கு நல்லதல்ல. காஷ்மீர் மக்களுக்கும் அது தீங்கு விளைவிக்கும்.
இது, காஷ்மீர் மக்களின் விருப்பத்தையோ அல்லது அவர்களின் சுயமரியாதை, கலாச்சார அடையாளம் ஆகியவற்றை பொருட்படுத்தாது. இந்தியாவுடன் ஒன்றாக இணைந்து இருப்பதுதான் காஷ்மீரில் வாழும் மக்களுக்கு நன்மை பயக்கும்.
தேச விரோத சக்திகளுடன் சேர்ந்து கொண்டு, காஷ்மீரை அழிப்பதில், பாகிஸ்தான் முனைந்து நிற்கிறது. காஷ்மீரை அழிக்க துடிக்கும் காஷ்மீரில் உள்ள சக்திகளும், பாகிஸ்தானுக்கு சாதகமாக செயல்படுகின்றன. எதிரிகள் காஷ்மீரை ஒரு கேடயமாகப் பயன்படுத்தி, அதனை ஒரு போர்க்களமாக மாற்ற முயற்சிக்கின்றனர்.