“கருணாநிதி குடும்பத்தின் அடிமை கட்சி தி.மு.க; அவரது குடும்பத்தின் கொத்தடிமைகள் தி.மு.க.வினர்”!!

“கருணாநிதி குடும்பத்தின் அடிமை கட்சி தி.மு.க; அவரது குடும்பத்தின் கொத்தடிமைகள் தி.மு.க.வினர்”!!

Update: 2019-09-23 08:18 GMT


ஒட்டன்சத்திரத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு பேசினார். அப்போத அவர் கூறியதாவது:-


1967-ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியை பிடிப்பதற்கு காரணம் அண்ணாவின் உழைப்பும், எம்.ஜி.ஆருக்கு மக்களிடையே இருந்த எழுச்சியும்தான். ஆனால் அந்த அண்ணாவின் மறைவுக்கு பின் தி.மு.க.வை தனது குடும்பத்தின் அடிமை கட்சியாக மாற்றிவிட்டார் கருணாநிதி. தி.மு.க.வினர், அவரது குடும்பத்துக்கு உழைக்கும் கொத்தடிமைகளாகி விட்டனர்.





கருணாநிதிக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் முடிசூட்டிக்கொண்டார். அவருக்கும்பின் உதயநிதி ஸ்டாலின். உதயநிதிக்குப்பின் அவரது மகன் இன்பநிதி. இப்படி ஒரே குடும்பத்தால் சுரண்டப்பட்டு, தி.மு.க. பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. தி.மு.க. என்பது, திருக்குவளை முன்னேற்ற கழகம் ஆகி விட்டது.


இவ்வாறு அவர் கூறினார்.


Similar News