#KathirOpinionColumn : மய்யம் என்னும் மதவெறி அரசியல்!
#KathirOpinionColumn : மய்யம் என்னும் மதவெறி அரசியல்!
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து, இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் பேசிய கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறியுள்ளார். இது முஸ்லிம்கள் நிறைந்த பகுதி என்பதால் இதனை கூறவில்லை என்று கூறிவிட்டு அதன் பிறகு, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறியுள்ளார். இவ்வாறு பேசிய நடிகர் கமலஹாசனின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பது, எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
நாதுராம் கோட்ஸே மகாத்மா காந்தியை சுட்டு கொன்றதால், அவரை தீவிரவாதி என்றும், அவரை ஒரு ஹிந்து என்றும் தெள்ள தெளிவாக அடையாளப் படுத்தியுள்ளார் கமலஹாசன். மகாத்மா காந்தியின் விடுதலை போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட நாதுராம் கோட்ஸே, இந்திய விடுதலையின் போது, இந்தியாவை பிளவு படுத்தி, பாகிஸ்தான் என்ற தனி தேசம் உருவாகுவதற்கு மகாத்மா காந்தியும் ஒரு காரணமாக இருந்தார் என்பதற்காக, அவருக்கு முன் நேருக்கு நேராக நின்று, அவரை சுட்டுக் கொன்றார் நாதுராம் கோட்ஸே. தான் சுட்டு கொன்றதை ஒப்பு கொண்ட நாதுராம் கோட்ஸே, சரணடைந்து, எதற்காக மகாத்மா காந்தியை சுட்டேன் என்றும் விளக்கி கூறினார். இதன் பிறகு, நாதுராம் கோட்ஸேவிற்கு சட்டத்தின் முன்பு தூக்கு தண்டனையும் கிடைத்தது. மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட இந்த அரசியல் கொலையை, தீவிரவாதமாக சித்தரித்தது மட்டுமல்லாமல், இதற்கு ஹிந்து மத சாயமும் பூசியுள்ளார் கமலஹாசன்.
உலகம் முழுவதும் மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் தீவிரவாத தாக்குதல்கள் பல நடக்கின்றன. சமீப காலங்களில் நடந்த இரண்டு தீவிரவாத தாக்குதல்களை பற்றி கமல்ஹாசனின் நிலைப்பாடு என்னவாக இருந்தது என்று பார்ப்போம். கடந்த மார்ச் மாதம், நியூஸிலாந்து நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள கிறிஸ்ட் சர்ச் என்ற நகரில் உள்ள இரு மசூதிகளில், அந்நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை பிற்பகல் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. அல் நூர் ( al Noor) மற்றும் டீன்ஸ் ஏவ் (Deans Ave) ஆகிய இரு மசூதிகளிலும் நடந்த தாக்குதலில், 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. மசூதியில் தாக்குதல் நடத்திய ப்ரெண்டன் டர்ரெண்ட் (Brenton Tarrant) என்பவன், தான் காரில் இருப்பதில் தொடங்கி, அங்கிருந்து இறங்கி மசூதிக்குள் சென்று, உள்ளே இருப்பவர்களைத் துப்பாக்கியால் சுடுவது வரை அனைத்தையும் முகநூலில் நேரலையாக பதிவு செய்துள்ளான். சுமார் 17 நிமிடங்கள் வரை இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த தீவிரவாத தாக்குதலை "கிறிஸ்துவ தீவிரவாதம்" என்று யாரும் கூறவில்லை. கமலஹாசனோ, இந்த தீவிரவாதத்தை பற்றி வாயை கூட திறக்கவில்லை.