ஜம்மு - காஷ்மீரில் உயிரிழந்த திருவாரூர் பாதுகாப்புப் படை வீரர் குடும்பத்திற்கு தமிழக பா.ஜ.க தலைவர் L.முருகன் இரங்கல்!
ஜம்மு - காஷ்மீரில் உயிரிழந்த திருவாரூர் பாதுகாப்புப் படை வீரர் குடும்பத்திற்கு தமிழக பா.ஜ.க தலைவர் L.முருகன் இரங்கல்!
ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பாதுகாப்புப் படை வீரர் திருமூர்த்தி குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார் தமிழக பா.ஜ.க தலைவர் L.முருகன்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது "இந்திய எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த திருவாரூர் மாவட்டம் புள்ளவராயன் பட்டியைச் சேர்ந்த திருமூர்த்தி அவர்கள், குண்டு காயம் பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் இழந்துள்ளது மிகுந்த மன வேதனையையும் துயரத்தையும் தந்துள்ளது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் வருத்தத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். திருமூர்த்தி அவர்களுக்கு வீர அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்."
திருமூர்த்தி மறைவு மிகுந்த துயரத்தை தந்துள்ளது.
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) August 2, 2020
- திரு.@Murugan_TNBJP அவர்கள். pic.twitter.com/S8tU8r30Su
மேலும், அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.