சட்டசபையில் ஸ்டாலினை “வச்சி செய்த” அமைச்சர் செல்லூர் ராஜூ! குட்டி கதை மூலம் கதறவிட்டார் !!
சட்டசபையில் ஸ்டாலினை “வச்சி செய்த” அமைச்சர் செல்லூர் ராஜூ! குட்டி கதை மூலம் கதறவிட்டார் !!
கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லுர் ராஜு சட்டசபையில் குட்டி கதை ஒன்றைச் சொல்லி ஸ்டாலின் எந்தகாலத்திலும் முதல்வர் ஆக மாட்டார் என்று மறைமுகமாக கூற சபையே சிறிது நேரம் சிரிப்பலையில் மூழ்கியது. அவர் சொன்ன கதை இதுதான்: -
ஒரு அப்பா தன் மகளுக்கு வரன் பார்த்தார். எந்த ஜாதகமும் பெண்ணுக்கு பொருந்தவில்லை. இந்நிலையில் தரகர் ஒரு ஜாதகத்தை கொண்டு வந்தார். அந்த வரனில் 10-ல் எட்டு பொருத்தம் நன்றாக உள்ளது. எட்டு பொருத்தம் உள்ளதே, இதுவே நல்ல ஜாதகம்தான் என பெண்ணின் தந்தை முடிவு செய்தார். பெண்ணும் அந்த ஆண்மகனை மணக்கச் சம்மதித்தார். திருமண ஏற்பாடு களைகட்டிது. மணமேடையில் மணமக்கள் அமர்ந்துள்ளனர். புரோகிதர் மந்திரம் சொல்கிறார். யாக குண்டத்தில் போடுவதற்காக பொரியை மாப்பிள்ளையிடம் கொடுத்தார் புரோகிதர். பொரி சாப்பிடுவதற்கு கொடுக்கிறார் என நினைத்த மாப்பிள்ளை அதனை தன் வாயில் போட்டார்.
உடனே புரோகிதர் “அட அபிஷ்டு... அபிஷ்டு... பொரியை யாக குண்டத்தில் போட கொடுத்தால் வாயில் போட்டு மெல்லுகிறாயே” என்றார். சரி என அதனை ஏற்றுக்கொண்ட மாப்பிள்ளை, வாயில் போட்ட பொரியை யாக குண்டத்தில் துப்ப, உடனே கடிந்துகொண்டார் புரோகிதர்.
இறுதியகத் தாலியை எடுத்து கட்டச் சொல்லி மாப்பிள்ளையிடம் கொடுத்தார். உடனே மாப்பிள்ளை “நான் எது செய்தாலும் நீங்கள் தவறு என்கிறீர்கள். ஆகவே தாலியை நீங்களே கட்டிவிடுங்கள்” எனக் கூற மண்டபமே அதிர்ச்சியில் உறைந்தது.
பெண்ணின் தந்தையிடம் வந்த தரகர், மாப்பிள்ளைக்கு சொல் புத்தியும் இல்லை சுய புத்தியும் இல்லை. இவைதான் குறைபட்ட இந்த இரு பொருத்தங்கள் என்றார். உடனே பெண்ணின் தந்தை திருமணத்தை நிறுத்தினார்.
இந்த கதையை கூறி முடித்த செல்லூர் ராஜு, “இந்த கதையில் வரும் மாப்பிள்ளை போலத்தான் சிலருக்கு மணமேடை வாய்க்கும், மண பொருத்தம் வாய்க்கும், ஆனால் திருமணம் ஆகாது” என மறைமுகமாக ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் அமர முடியாது என்பதை கதை மூலம் சொல்லி முடித்தார்.