20 நாட்களுக்கு முன்னர் கிரேஸி மோகன் நிலை? வைரல் புகைப்படம் உள்ளே
20 நாட்களுக்கு முன்னர் கிரேஸி மோகன் நிலை? வைரல் புகைப்படம் உள்ளே
கிரேஸி மோகன் தமிழ் சினிமாவில் இப்படியெல்லாம் வசனங்களை எழுத முடியுமா
என்று ரசிக்க வைத்தவர். அப்படி அவர் எழுதிய படங்களில் ஒன்று பஞ்ச தந்திரம்
இந்த படத்தை பார்த்தாலே தெரியும் அவரின் திறமை.
இப்படிபட்ட கலைஞர் தற்போது நம்முடன் இல்லை என்பது அனைவருக்குமே ஒரு பெரிய வருத்தம். காருக்கு பின்னாடி முன்னாடி என்ன இருந்தது, How Do I Know இந்த வார்த்தைகளை மறக்கவே முடியாது. இது மட்டும் இல்லை எத்தனையோ படங்களில் ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் வசனங்கள் எழுதியுள்ளார் கிரேஸி மோகன்.
மாரடைப்பு என்பது இதுவே முதல் முறையாம் அவருக்கு. பிரபலங்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகை ஆர்த்தி ஒரு பதிவு போட்டுள்ளார்.அதில் 20 நாட்களுக்கு முன்பு கூட அவரை சந்தித்தோம், அப்போது அவருக்கு இருந்த ஒரே பிரச்சனை கண் பார்வை கோளாறு மட்டும் என பதிவு அவருடன் எடுத்த புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.