தனி ஒருவனில் நடித்திருக்க வேண்டிய அஜீத் - ரகசியத்தை உடைத்த மோகன் ராஜா..
தனி ஒருவனில் நடித்திருக்க வேண்டிய அஜீத் - ரகசியத்தை உடைத்த மோகன் ராஜா..
2015ம் ஆண்டு ஜெயம் ரவி - அரவிந்த் சாமி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'தனி ஒருவன்'. அந்த படம் அரவிந்த் சாமிக்கு நல்ல படமாக அமைந்தது. அந்த படம் வெளியான போது அதில் அஜீத்தும் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என அனைவரும் கூறி வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், 'தனி ஒருவன்' விவாத்தின் போது தானும் தனது உதவியாளரும், அரவிந்த் சாமி ஏற்று நடித்திருந்த சித்தார்த் அபிமன்யு பாத்திரத்தில் முதலில் அஜீத் நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணியிருந்தோம். இறுதியில் அரவிந்த் சாமி கச்சிதமாக இருப்பார் என எண்ணி அவரை நடிக்கவைத்தோம் என்றார்