பட்டினிக்கு இரையானார் தாய்! இறுதி சடங்கு செய்ய பணம் இல்லாததால் குப்பை தொட்டியில் போட்டார் மகன்! ஏழை தமிழ் பிராமணனின் இன்றைய நிலை !!
பட்டினிக்கு இரையானார் தாய்! இறுதி சடங்கு செய்ய பணம் இல்லாததால் குப்பை தொட்டியில் போட்டார் மகன்! ஏழை தமிழ் பிராமணனின் இன்றைய நிலை !!
பட்டினி தாயின் உயிரை குடித்தது. வறுமை அவருக்கு இறுதி சடங்குகூட செய்ய முடியாத நிலைக்கு மகனை தள்ளியது. 29 வயது பிராமணனுக்கு நேர்ந்த கொடுமை. முத்துநகர் என்ற தூத்துக்குடியில்தான் இந்த துக்க சம்பவம் நிகழ்ந்துள்ளது.
துாத்துக்குடி தனசேகரன்நகரைச் சேர்ந்தவர் முத்துலட்சுமணன். 32 வயதான இவர், பிராமண சமுதாயத்தை சேர்ந்த. சிறிய கோவில்களில் பூஜை செய்து வந்தார்.
இவரது தாய் வசந்தி (வயது 57). இவருடன் வசித்து வந்தார். இவரின் தந்தை நாராயணசாமி (63) உறவினரின் உதவியால் சென்னையில் உள்ள ஒரு முதியோர் காப்பகத்தில் தங்கியுள்ளார்.
முத்துலட்சுமணனின் வருமானம், இருவரது வயிற்றுப்பாட்டுக்கே போதவில்லை. இதனால் வீட்டில் சரியாக சமைக்க முடியாத நிலையே நீடித்தது. இதனால் இருவரும் பட்டினியால் பரிதவித்து உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கோவில் பூஜையை முடித்துவிட்டு இரவு முத்துலட்சுமணன் வீடு திரும்பினார். அப்போது வசந்தி இறந்து கிடந்தார்.
இறுதி சடங்குகள் செய்வதற்குகூட முத்துலட்சுமணனிடம் பணமில்லை. என்ன செய்வதென்று அவருக்கு தெரியவில்லை. இறுதியில் மனதைக் கல்லாக்கிக் கொண்டு பெற்ற தாய் வசந்தியின் உடலை துாக்கிச் சென்று, அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு சென்றுவிட்டார்.
நேற்று காலை வழக்கம்போல, குப்பை அள்ள வந்த துப்புரவு பணியாளர்கள், பிணத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து அந்த உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவ மனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்த தாயின் இரைப்பையில் உணவுப் பொருட்கள் எதுவும் இல்லாமல் காலியாக இருந்ததை கண்ட டாக்டர்கள் கண்களில் கண்ணீர் வடிந்துள்ளது.