பகவத் கீதை வாசித்தவரை அடித்து உதைத்த முஸ்லிம்கள் !!

பகவத் கீதை வாசித்தவரை அடித்து உதைத்த முஸ்லிம்கள் !!

Update: 2019-07-08 13:07 GMT

டெல்லி இந்தியா கேட் பகுதியை சேர்ந்தவர் தில்ஷர் . 42 வயதான இவர், தனது வீட்டில் தினமும் காலையில் பகவத் கீதை, ராமாயணம் ஆகியவை வாசிக்கும் பழக்கம் கொண்டவர்.  இதற்கு அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் முகமது சபீர், ஜாகிர் ஆகிய இரு முஸ்லிம்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும் தில்ஷர் இதை கண்டுகொள்ள வில்லை.


வழக்கம்போல் தில்ஷர் தனது வீட்டில் பகவத்கீதை வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டுக்குள் திடீரென அத்து மீறி நுழைந்த அமீரும், ஜாகீரும் அவரை அடித்து உதைத்தனர். பின்னர் அவரிடம் இருந்த பகவத்கீதை, இராமாயணம் ஆகியவற்றை பறித்து சென்றனர்.


இது தொடர்பாக தில்ஷர் போலீசில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து இந்தியா கேட் போலீசார் வழக்குப் பதிவு செய்து அமீர் மற்றும் ஸாகீரை கைது செய்தனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 298 (வேண்டுமென்று மத உணர்வுகளை புண்படுத்துவது), சட்டம் 452 (வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து காயப்படுத்துதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.


Similar News