கத்தார் நாட்டில் இந்திய சமூகத்திற்கான அடித்தளம் - முன்னுதாரணமான தமிழர்களின் முயற்சி!
கத்தார் நாட்டில் இந்திய சமூகத்திற்கான அடித்தளம் - முன்னுதாரணமான தமிழர்களின் முயற்சி!
கத்தார் நாட்டில் புதியதாக திறக்கப்பட்ட IICC (Indian Integrated Community Centre) கட்டிடத்தை கத்தார் நாட்டுக்கான இந்திய தூதுவர் குமரன் திறந்து வைத்தார்.
கத்தார் நாட்டில் இந்திய சமூகத்திற்கு, குறிப்பாக தமிழ்ச் சமூகத்திற்கு TEYSEER MOTORS நிதி மற்றும் நிர்வாக மேலாளர் பசுபதி ஆனந்த் அவர்கள் ஆற்றி வரும் உதவிகளையும் சேவைகளையும் பாராட்டி அவரை கௌரவிக்கும் விதமாக அந்த கட்டிட வளாகத்தின் ஒரு பகுதிக்கு "ஆனந்த் பசுபதி ஹால்" என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
தமிழராக உங்களின் உயர்வினில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்று விழா ஏற்பாட்டாளர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.