பதக்கம் பெற்ற வீரர்களுக்கு அரசு வேலை! விளையாட்டு வீரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி அறிவித்த அனுராக் தாக்கூர்!
மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராதாக்கூர் கேலோ இந்தியா போட்டிகளில் பதக்கம் பெற்றவர்கள் அரசு வேலை பெற தகுதியானவர்கள் என்று அறிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக பேசிய மத்திய விளையாட்டு துறை அமைச்சர், அனைத்து விதமான கேலோ இந்தியா போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் அரசு வேலைக்கு தகுதி உடையவர்களாக ஆகிறார்கள் என்று கூறியுள்ளார்.
வரைமுறைகள் மாற்றியமைக்கப்படுவதாகவும் இதன் மூலம் இளைஞர்கள் விளையாட்டுகளில் அதிகம் பங்கு வெற்றி வெற்றியை பெறுவதற்கான ஊக்கம் கிடைக்கும் என்றும் இந்த அறிவிப்பு விளையாட்டு வீரர்களுக்கு பெரிது பயனளிக்கும் என்றும் கூறியுள்ளார்.
அதோடு பிரதமர் நரேந்திர மோடியின் கனவான விளையாட்டில் இந்தியாவை வல்லரசாக்குவது நனவாகுவதற்கு இது போன்ற மாற்றங்கள் உதவும் என்றும் கூறியுள்ளார்.
Source : Daily Thanthi