வெளியான பிரபல நிறுவனத்தின் கருத்துக்கணிப்பின் முடிவுகள்..! என்ன கூறுகிறது பிரதமர் குறித்து அந்த சர்வே!

Update: 2024-04-20 13:29 GMT

 பிரபல பத்திரிகை நிறுவனமான டெய்லி ஹன்ட் நடத்திய தேசத்தின் நம்பிக்கை என்ற கணக்கெடுப்பின் முடிவுகள் 2024 ஆம் ஆண்டுக்கான பொது தேர்தலில் இந்தியா தனது முதல் வாங்கினை நேற்று பதிவு செய்த நிலையில் வெளியானது. அதில் தலைமை, பொருளாதார மேலாண்மை மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் ஒட்டுமொத்த செயல் திறன் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. 

அவற்றிற்கு பதில் அளித்தவர்களில் 61% பேர் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளனர். இந்த முறையும் பாஜக வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக 63% பேர் தேசிய திறனாய்வு கூட்டணிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். 

அதே சமயத்தில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் அரசாங்கம் பொருளாதாரத்தை கையாளுவது குறித்த கேள்வி கேட்கப்பட்டதற்கு 60% பேர் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் திருப்தி அடைந்திருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி 64% பேர் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி தொடர விரும்புகிறார் என்று டெய்லி ஹன்ட் மேற்கொண்ட தேசத்தின் நம்பிக்கை என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளது. 

Source : The Hindu Tamil thisai 

Similar News