பிரதமர் மோடியை போன்ற தலைவர் எங்களுக்கு வேண்டும் - பாகிஸ்தான் தொழிலதிபர்..!

Update: 2024-05-15 12:49 GMT

பிரதமரை போன்ற தலைவர் பாகிஸ்தானுக்கு வேண்டுமென பாகிஸ்தான் தொழில் அதிபர் சஜித் தரார் புகழாரம் சூட்டியுள்ளார். 

அதாவது, பிறப்பிலேயே மோடி தலைவராவார், அவற்றிற்கான அனைத்து குணாதிசயங்களும் அவரிடம் இயல்பாகவே உள்ளது. இந்தியாவின் அடுத்த பிரதமரும் அவர்தான், இந்தியா இளம் மக்கள் தொகையின் மூலம் வளம் பெறுகிறது என்று கூறினார். 

மேலும், பாகிஸ்தானில் தற்போது நிலவிவரும் அடிப்படை பிரச்சனைகளுக்கு கூட அந்நாட்டு அரசு தீர்வு காணாமல் உள்ளது. உச்சத்தில் இருக்கும் பண வீக்கத்தால் எரிபொருள் விலை மற்றும் அத்தியாவசிய பொருள்கள் விலை எல்லாமே உச்சத்தில் உள்ளது! 

வரலாறு காணாத நெருக்கடியில் நாடு உள்ளது வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளன இதனால் எங்களால் ஏற்றுமதியும் மேற்கொள்ள முடியவில்லை. அதோடு அரசியல் ரீதியாக நாட்டில் அசாதாரண சூழ்நிலையும் நிலவுகிறது, சட்ட ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வரவும் பயங்கரவாதத்தையும் கட்டுப்படுத்தவும் வேண்டியுள்ளது. அதனால் இப்படிப்பட்ட இக்கட்டான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் ஒரு தலைவர் எங்களுக்கு தேவை என்று அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்ற பாகிஸ்தான் தொழிலதிபர் சஜித் தரார் தெரிவித்துள்ளார். 

Source : The Hindu Tamil thisai 

Similar News