#KathirExclusive "பொறுத்தது போதும் பொன்மணி" - பொன்மணி வைரமுத்துவின் தோழி எழுதும் திறந்த மடல்!
#KathirExclusive "பொறுத்தது போதும் பொன்மணி" - பொன்மணி வைரமுத்துவின் தோழி எழுதும் திறந்த மடல்!
என் அன்புக்கினிய தோழி பொன்மணிக்கு,
உன் கல்லூரித் தோழி எழுதிக் கொள்வது. நீ நலமா?உன் காதல் திருமணத்திற்குப் பின் சில காலம் மட்டுமே உன்னோடு தொடர்பில் இருந்தேன். இப்பொழுது நடக்கும் விஷயங்களைக் கேள்விப்பட்டு அதிர்ந்து இந்தக் கடிதத்தை நான் உனக்கு எழுதுகிறேன். பொன்மணி வைரமுத்து என்கிற பெயர் பொருத்தமே அன்று நாங்கள் எல்லாரும் உன் திருமண உறவை போற்றிப் பாராட்ட இயற்கை கொடுத்த வசந்தத் தோரணமாக நினைத்தோம். பெற்றோர்களை எதிர்த்து இரு கவிஞர்களின் நிறைவேறிய காதல் லைலா மஜ்னு,அம்பிகாபதி அமராவாதி,ரோமியோ ஜூலியட்,காதல்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளியது. உங்களது காதலில் பிரிவில்லை,மரணமில்லை திருமணத்தில் முடிந்தது.
அன்று வரை பிறந்த வீட்டில் ராணியாகவே வாழ்ந்திருந்தாலும் திருமணத்திற்குப் பின் ஒன்டுக்குடித்தினத்தில் தட்டு முட்டு சாமான்களை வைத்துக் குடும்பம் நடத்துவதிலும் நீ மகிழ்ச்சியாகவே இருந்தாய்,காதல் கணவரின் இதய சிம்மாசனத்தில் ராணியாக இடம் பெற்றதால்! பேராசிரியராக பாடம் புகட்டி உன் தமிழறிவை இளம் குருத்துகளுடன் பகிர்ந்து கொண்டே,குடும்பத்திற்கான பொருள் ஈட்டினாய். உன் காதல் கணவன் கலைத் துறையில் கால் பதிக்க உன்னால் முடிந்த தியாகங்களை செய்தாய். அதற்கு நன்றிக் கடனாய் உன் கணவரும் தான் சினிமாவிற்கு எழுதிய முதல் பாடலை உன் பெயருடன் சுபமாக ஆரம்பித்தார். பொன் மாலைப் பொழுது இது ஒரு பொன் மாலைப் பொழுது. உன் மூத்த மகனை ஈன்றதும் அப்பொழுது தானே?
அழகான இரு மகன்களுடன் இனிய இல்லறம் நடைபெற்று வரும்போது எப்பொழுது உன் கணவர் தடம் மாறினான்?சினிமாவில் புகழ் சேர்ந்த பின்னா?நிறைய பணம் சேர்ந்த பின்னா இல்லை அரசியல் தொடர்புடன் வந்த செல்வாக்கிற்குப் பின்னா?உன் அறிவிற்கும் ஞானத்திற்கும் இந்த ஆணைவிட வேறு சிறந்த ஆண் கிடைத்திருப்பார் ஆனால் உன் அன்பு இவருக்கே என்று ஆன பிறகு வேறு என்ன யார் சொல்லி உன் மனத்தை மாற்றியிருக்க முடியும். அப்படிப்பட்ட உன் அன்பை எப்படி உதாசீனம் செய்தார்?
உன் கல்லூரித் தோழி எழுதிக் கொள்வது. நீ நலமா?உன் காதல் திருமணத்திற்குப் பின் சில காலம் மட்டுமே உன்னோடு தொடர்பில் இருந்தேன். இப்பொழுது நடக்கும் விஷயங்களைக் கேள்விப்பட்டு அதிர்ந்து இந்தக் கடிதத்தை நான் உனக்கு எழுதுகிறேன். பொன்மணி வைரமுத்து என்கிற பெயர் பொருத்தமே அன்று நாங்கள் எல்லாரும் உன் திருமண உறவை போற்றிப் பாராட்ட இயற்கை கொடுத்த வசந்தத் தோரணமாக நினைத்தோம். பெற்றோர்களை எதிர்த்து இரு கவிஞர்களின் நிறைவேறிய காதல் லைலா மஜ்னு,அம்பிகாபதி அமராவாதி,ரோமியோ ஜூலியட்,காதல்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளியது. உங்களது காதலில் பிரிவில்லை,மரணமில்லை திருமணத்தில் முடிந்தது.
அன்று வரை பிறந்த வீட்டில் ராணியாகவே வாழ்ந்திருந்தாலும் திருமணத்திற்குப் பின் ஒன்டுக்குடித்தினத்தில் தட்டு முட்டு சாமான்களை வைத்துக் குடும்பம் நடத்துவதிலும் நீ மகிழ்ச்சியாகவே இருந்தாய்,காதல் கணவரின் இதய சிம்மாசனத்தில் ராணியாக இடம் பெற்றதால்! பேராசிரியராக பாடம் புகட்டி உன் தமிழறிவை இளம் குருத்துகளுடன் பகிர்ந்து கொண்டே,குடும்பத்திற்கான பொருள் ஈட்டினாய். உன் காதல் கணவன் கலைத் துறையில் கால் பதிக்க உன்னால் முடிந்த தியாகங்களை செய்தாய். அதற்கு நன்றிக் கடனாய் உன் கணவரும் தான் சினிமாவிற்கு எழுதிய முதல் பாடலை உன் பெயருடன் சுபமாக ஆரம்பித்தார். பொன் மாலைப் பொழுது இது ஒரு பொன் மாலைப் பொழுது. உன் மூத்த மகனை ஈன்றதும் அப்பொழுது தானே?
அழகான இரு மகன்களுடன் இனிய இல்லறம் நடைபெற்று வரும்போது எப்பொழுது உன் கணவர் தடம் மாறினான்?சினிமாவில் புகழ் சேர்ந்த பின்னா?நிறைய பணம் சேர்ந்த பின்னா இல்லை அரசியல் தொடர்புடன் வந்த செல்வாக்கிற்குப் பின்னா?உன் அறிவிற்கும் ஞானத்திற்கும் இந்த ஆணைவிட வேறு சிறந்த ஆண் கிடைத்திருப்பார் ஆனால் உன் அன்பு இவருக்கே என்று ஆன பிறகு வேறு என்ன யார் சொல்லி உன் மனத்தை மாற்றியிருக்க முடியும். அப்படிப்பட்ட உன் அன்பை எப்படி உதாசீனம் செய்தார்?