பாகிஸ்தானில் அரசாங்க உத்தரவுகளை மதிக்காமல் மதவாதிகளின் வழியில் மதி கெட்டு செல்லும் மக்கள், உலக நாடுகள் வேதனை.!
பாகிஸ்தானில் அரசாங்க உத்தரவுகளை மதிக்காமல் மதவாதிகளின் வழியில் மதி கெட்டு செல்லும் மக்கள், உலக நாடுகள் வேதனை.!
பாகிஸ்தானில் கொரோனா நோயால் இதுவரை 5,300 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது வரை 100 பேர்வரை கொரோனாவால் பலியாகி உள்ளார்கள். இது கிட்டத்தட்ட இந்தியாவில் ஏற்பட்டுள்ள தொற்று மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேலாகும்.
இந்தியாவுடன் ஒப்பிடும் போது பாகிஸ்தான் மிகவும் சிறிய நாடாகும், இந்தியாவில் 130 கோடி மக்கள், ஆனால் பாகிஸ்தான் மக்கள் தொகை 21 கோடிதான்..ஆனாலும் பாதிப்பு மிகவும் கடுமையாக உள்ளது என்பதை அந்த நாட்டு மக்கள் புரிந்து கொள்ளவில்லை, இதனால் கொரோனாவை கட்டுப் படுத்தும் இம்ரான் அரசின் நடவடிக்கைகள் பயனில்லாமல் போவதாக உலகளாவிய செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
இதற்கு காரணம் மக்களில் அநேகம் பேர் படித்தவர்களாக இருந்தாலும், விவரங்கள் தெரிந்தவர்களாக இருந்தாலும் மசூதிகள் மற்றும் மத தலைவர்கள் என்ன கூறுகிறார்களோ அதை மட்டுமே ஏற்கும் பழமை வாதம் இன்னும் பல பேரிடம் உள்ளதுதான் எனக் கூறப்படுகிறது.
இதனால் சென்ற வெள்ளிக்கிழமை கூட ஏராளமான மசூதிகள், பள்ளிவாசல்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஏராளமான போலீசார் கையில் ஒலிபெருக்கிகளை வைத்து எச்சரிக்கை செய்தும் பிரயோஜனம் இல்லை என்றும் மத்திய பாகிஸ்தான் நகரமான முல்தானில் உள்ள ஒரு மசூதியில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஒரு டஜன் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்கள் வருகை தருகிறார்கள் என்றும் அவர்கள் முக மூடி இல்லாமல் பிரார்த்தனை செய்வதாக சபீர் துரானி என்பவர் கூறுகிறார்.
மேலும் பாகிஸ்தான் அரசு சென்ற மாத இறுதியில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட மத சபைகளுக்கு தடை விதித்து இருந்தாலும் அந்த சபைகளில் அரசு உத்தரவுகள் மீறப்படுவதாக கூறியுள்ளார். தன்னாலும் மத சபைகளுக்கு போகாமல் இருக்க முடியவில்லை என்று கூறிய அவர்,
"எங்கள் மசூதியின் பிரார்த்தனை நடத்தும் தலைவர், வைரஸ் மேற்கத்திய மக்களைப் போலவே நம்மைப் பாதிக்க முடியாது, நாம் நம் கைகளை கழுவுகிறோம், நாம் பிரார்த்தனைகளைச் சொல்வதற்கு ஒரு நாளைக்கு ஐந்து முறை முகத்தை கழுவுகிறோம், மேலும் இங்கு காஃபிர்கள் இல்லை, எனவே நாம் கவலைப்பட தேவையில்லை, கடவுள் நம்மோடு இருக்கிறார்." என்று அவர் கூறுவதாக கூறினார்.