“வங்கி பணத்தை கொள்ளை அடித்தவர்களை பார்த்துக்கொண்டு பிரதமர் மோடி சும்மா இருக்க மாட்டார்” - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காட்டம்!!

“வங்கி பணத்தை கொள்ளை அடித்தவர்களை பார்த்துக்கொண்டு பிரதமர் மோடி சும்மா இருக்க மாட்டார்” - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காட்டம்!!

Update: 2019-08-22 06:49 GMT


ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:-


வங்கி பணத்தை கொள்ளை அடித்தவர்களை பார்த்துக்கொண்டு பிரதமர் மோடி சும்மா இருக்க மாட்டார். சிதம்பரம் நியாயமானவர் என்றால், நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். 


மறைந்த ஜெயலலிதா மீது வழக்கு போட்டு, சட்டம் பேசியவர், இன்று ஏன் பயப்படவேண்டும். சட்டம், தன் கடமையை செய்து வருகிறது. 


சட்டத்திற்கு சிதம்பரமும், பாமரனும் ஒன்று தான். சிதம்பரம் குற்றம் செய்திருக்கிறார், மோடி அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.


இவ்வாறு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.


Similar News