சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த காம கொடூரனுக்கு தூக்கு - கோவை போக்சோ கோர்ட் அதிரடி தீர்ப்பு!

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த காம கொடூரனுக்கு தூக்கு - கோவை போக்சோ கோர்ட் அதிரடி தீர்ப்பு!

Update: 2019-12-28 05:29 GMT

கோவை, துடியலுார் அருகே கடத்த மார்ச் மாதம்  6 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக, சந்தோஷ்குமார். போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான், கோவையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது, இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் விசாரணையை முடித்தனர், குற்றம்சாட்டப்பட்ட சந்தோஷ்குமார் மீதான குற்றம் நிரூபணமானதால், அவர் குற்றவாளி என கோவை போக்சோ கோர்ட் தீர்ப்பு வழங்கியது.



இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி ராதிகா அளித்த தீர்ப்புயில் இந்த வழக்கில் சந்தோஷ்குமார் குற்றவாளி என்று அவருக்கு பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஆயுள் தண்டனையும், கொலை செய்ததற்காக 302 பிரிவின் கீழ், தூக்கு தண்டனையும், தடயங்களை அழித்ததற்காக 201 பிரிவின் கீழ், 7 ஆண்டுகள் சிறையும் தண்டனை விதிக்கப்படுகிறது என நீதிபதி ராதிகா உத்தரவிட்டார்,சந்தோஷை தவிர்த்து மற்றொரு நபரின் டிஎன்ஏ கலந்து இருப்பதாகவும், பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்திருப்பதாகவும் எனவே மறுவிசாரணை செய்ய வேண்டும் என சிறுமியின் தாயார் தரப்பு வக்கீல் வாதிட்டார்,இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி மறு விசாரணைக்கு உத்தரவிட்டார்.


Similar News