அரசுப்பள்ளியில் தன் மகனை சேர்த்த அரசு ஆசிரியர்கள் - குவியும் பாராட்டுக்கள்
அரசுப் பள்ளியில் தனது மகனை சேர்த்த அரசுப் பள்ளி ஆசிரியர் தம்பதியினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அரசுப் பள்ளியில் தனது மகனை சேர்த்த அரசுப் பள்ளி ஆசிரியர் தம்பதியினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் முதுநிலை ஆசிரியராக பணிபுரிபவர் செந்தில்குமார், இவர் மனைவி சாந்தகுமாரி சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலங்கியல் முதுகலை ஆசிரியையாக பணிபுரிகிறார், இருவரும் உதவி தலைமை ஆசிரியராக பொறுப்பு வகிக்கின்றனர்.
இந்த நிலையில் ஆசிரியர் தம்பதியினர் தங்கள் மகன் கமலை சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்த்துள்ளனர். அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் தம்பதிகள் தங்கள் மகளை அரசுப் பள்ளியில் சேர்த்து முன்னுதாரணமாக திகழ்வதற்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.