கொரோனாவுக்கு புதுச்சேரி மாநிலத்தின் முதல் பலி - அச்சத்தில் மக்கள்

கொரோனாவுக்கு புதுச்சேரி மாநிலத்தின் முதல் பலி - அச்சத்தில் மக்கள்

Update: 2020-04-11 07:56 GMT

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றால் 7 பேர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லி சென்று புதுச்சேரி திரும்பிய 5 பேரும் அவருடன் தொடர்பில் இருந்த மேலும் ஒருவர் என 6 பேரும் இதேபோல் புதுச்சேரி யூனியன் பிரதேசமான மாஹேவை சேர்ந்த 71-வயது முதியவரும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.


இந்நிலையில் மாஹே பிராந்தியத்தில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் இதனை சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கொரோனாவிற்கு புதுச்சேரி மாநிலத்தில் முதல் பலியாகி உள்ள சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News