"நா வேணுமா இல்ல அந்த சித்து வேணுமா?" காங்கிரஸ் தலைமைக்கு கெடு விதித்த பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்!

"நா வேணுமா இல்ல அந்த சித்து வேணுமா?" காங்கிரஸ் தலைமைக்கு கெடு விதித்த பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்!

Update: 2019-05-24 08:27 GMT

பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்கிற்கும், பஞ்சாப் மாநில அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் எப்போதும் ஏழாம் பொறுத்தம் தான். இருவரும் மாற்றி மாற்றி வசைபாடி வந்தனர்.


சித்து என்னை நீக்கிவிட்டு பஞ்சாப் முதல்வராக வேண்டும் என திட்டம் தீட்டுவதாக பகிரங்கமாக போட்டு உடைத்தார் அமரிந்தர் சிங்.


நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமரிந்தர் சிங், பாகிஸ்தான் ராணுவ தளபதிகளை கட்டியணைப்பதை என்னப்போன்ற எந்த முன்னாள், இந்நாள் ராணுவ வீரனும் அனுமதிக்க மாட்டான் என்று காட்டமாக சித்துவை வறுத்தெடுத்தார். சமீபத்தில் பாகிஸ்தான் சென்றிருந்த சித்து ஒரு அரசு விழாவில் பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டியணைத்து, கொஞ்சி கொளாவினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதையடுத்து சித்துவின் டார்ச்சர் தாங்க முடியாத அமரிந்தர் சிங் காங்கிரஸ் தலைமைக்கு ஒன்னு, நான் இல்ல அவன் என்ற ரீதியில் முடிவு செய்ய வேண்டும் என கெடு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் அரசாங்கல் இந்தியாவில் இருப்பதே நான்கைந்து மாநிலங்களில் தான், அதுக்கே இந்த அக்கப்போரா என காங்கிரஸ் தலைமை நொந்து போய் உள்ளதாம்.


Similar News