ராகுல் காந்தியின் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்! மொழிப்பெயர்க்கவே திணறிய கே.எஸ்.அழகிரி!

ராகுல் காந்தியின் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்! மொழிப்பெயர்க்கவே திணறிய கே.எஸ்.அழகிரி!

Update: 2021-01-24 07:00 GMT

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பி -யுமான ராகுல்காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கோவையில் ஒரு கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசியதை மொழிபெயர்க்க காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி திக்குமுக்காடியுள்ளார். அதன் காணொளியை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

ராகுல்காந்தி தனது முதல்கட்ட பிரசாரத்தை நேற்று கோவை மாவட்டத்தில் தொடங்கினார். அப்போது கூட்டத்தில் ராகுல் காந்தி ஆங்கிலத்தில் பேசியதை கே.எஸ். அழகிரி மொழிபெயர்த்துள்ளார். 

ராகுல் காந்தி : If we say that Tamilnadu is India, then we have to say that India is Tamilnadu.
கே.எஸ். அழகிரி : தமிழ்நாடு என்பது இந்தியா மட்டுமல்ல, இந்தியா என்பதே தமிழ்நாடு என்ற வகையில் அமைந்துள்ளது. 
ராகுல் காந்தி : It cannot be like Modi Ji said, that we say Tamilnadu is India, but India is not Tamilnadu.
கே.எஸ்.அழகிரி : தமிழ்நாடு என்பது இந்தியாவின் ஒரு பகுதி என்று மோடி கருதுவது மாதிரி இருக்காது. தமிழ்நாடே இந்தியாவாக இருக்கும் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். 

இந்த காணொளியை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கிண்டலடித்து வருகின்றனர்.


 


ராகுல் காந்தி ஆங்கிலத்தில் பேசியதை தமிழில் மொழிபெயர்த்த கே.எஸ். அழகிரியின் நிலையை கண்டு பலரும் வருத்தப்பட்டு ட்விட்டரில் பதிவிட்டனர்.
 


 


 

Similar News