சுப்ரமணியசாமியிடம் சிக்கி கொண்டு விழிபிதுங்கும் ராகுல் உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் !

சுப்ரமணியசாமியிடம் சிக்கி கொண்டு விழிபிதுங்கும் ராகுல் உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் !

Update: 2019-04-30 07:09 GMT

பிரிட்டன் குடியுரிமை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட பேக்காப்ஸ் லிமிடெட் என்ற கம்பெனி உள்ளதாகவும், அதன் இயக்குனராக நீங்கள் இருப்பதாகவும் பா.ஜ., எம்.பி., சுப்ரமணியன்சுவாமி புகார் தெரிவித்துள்ளார்.
கடந்த 10.10.2005 மற்றும் 31.10.2006 ல் பதிவு செய்யப்பட்ட கம்பெனியின் வரவு செலவு அறிக்கையில், உஙகளின் பிறந்த தேதி 19.06.1970 எனக்கூறப்பட்டுள்ளது. பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் எனக்கூறப்பட்டுள்ளது. 17.02.2009 ல் அந்த நிறுவனத்தை கலைக்க அனுமதி கேட்டு அளிக்கப்பட்ட விண்ணப்பத்திலும், உங்களது குடிரிமை பிரிட்டன் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால், இந்த நோட்டீஸ் கிடைத்த பின் 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் . இவ்வாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.


Similar News