“ராஜராஜனின் பேரன்கள், பல ஜாதிகளில் இருக்கிறார்கள்” - ராஜராஜனை இழிவுபடுத்தி, பா.ரஞ்சித் மீண்டும் திமிர் பேச்சு!!

“ராஜராஜனின் பேரன்கள், பல ஜாதிகளில் இருக்கிறார்கள்” - ராஜராஜனை இழிவுபடுத்தி, பா.ரஞ்சித் மீண்டும் திமிர் பேச்சு!!

Update: 2019-07-26 12:12 GMT


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்பனந்தாளில் கடந்த மாதம் (ஜூன் - 5) நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பா.ரஞ்கித், ராஜராஜன் ஆட்சிக்காலத்தை இருண்ட காலம் என்றும், தலித் மக்களின் சொத்துக்களை அவர் பறித்து விட்டார் என்றும் மேலும் அவரை இழிவுபடுத்தியும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.


இதுதொடர்பான வழக்கில், கோர்ட் உத்தரவின் பேரில், திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.


இந்த நிலையில், சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பா.ரஞ்சித் மீண்டும் மாமன்னன் ராஜராஜனைப் பற்றி இழிவாக பேசியுள்ளார். 




https://youtu.be/kUaRs9KC2lE



“ராஜராஜனின் பேரன்கள் பல ஜாதிகளில் இருக்கிறார்கள்” என்று பா.ரஞ்சித் திமிர் தனமாக பேசியுள்ளார்.


பா.ரஞ்சித்தின் இந்த திமிர் பேச்சு, தமிழர்களிடத்தில் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.


Similar News