பிரதமர், முதலமைச்சரை கேலி செய்பவர்கள் சமூக விரோதிகள் - ராஜேந்திர பாலாஜி

பிரதமர், முதலமைச்சரை கேலி செய்பவர்கள் சமூக விரோதிகள் - ராஜேந்திர பாலாஜி

Update: 2020-04-08 04:04 GMT

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அண்ணாசிலை அருகே திருத்தங்கல் நகராட்சி மற்றும் பொறியல் கல்லூரி இணைந்து உருவாக்கிய கொரோனா கிருமி நாசினி தெளிக்கும் பாதையைத் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார் பின்னர் செய்தியாளரை சந்தித்து அவர் "கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மற்றும் முதலமைச்சரை கேலி செய்பவர்கள் சமூக விரோதிகள்" என்று விமர்சித்துள்ளார்.

கொரோனா வைரஸால் பல வல்லரசு நாடுகள் மிகப்பெரிய பாதிப்படைந்துள்ள நிலையில் வல்லரசு நாடுகளை பார்க்கின்ற போது இந்தியா மற்றும் தமிழ்நாடு மிகப்பெரிய பாதிப்பு இல்லாத வகையில் அரசு கட்டுப்படுத்தி இருக்கு என்று சொன்னால் அரசின் தக்க நடவடிக்கை தான் காரணம்! எல்லா நிலைமையிலும், ஒவ்வொரு சூழலிலும் முதலமைச்சர் மற்றும் பிரதமரை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கேலி செய்பவர்கள் சமூக விரோதிகள் இதுபோன்ற சூழ்நிலையில் குறை சொல்பவர்கள் நிச்சயம் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள் என விமர்சித்தார்.

Similar News