கொரோனா சிகிச்சைக்கு திருமண மண்டபம் தர முன் வந்த ரஜினி.. குவியும் பாராட்டுக்கள்..

கொரோனா சிகிச்சைக்கு திருமண மண்டபம் தர முன் வந்த ரஜினி.. குவியும் பாராட்டுக்கள்..

Update: 2020-04-08 03:04 GMT

இந்தியாவில் கடந்த மாதம் ஒற்றை இலக்கத்தில் துவங்கிய கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்திய அளவில் 4500 க்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் மட்டுமே 150 ஐ எட்டி விட்டது. பிரபலங்கள் பலரும் தங்களால் ஆன உதவிகளை அரசுக்கு செய்து வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி தனது திருமண மண்டபத்தை கரோனா சிகிச்சைக்காக அரசுக்கு தர முன் வந்துள்ளார்.

கவிப்பேரரசு வைரமுத்துவும் தனது திருமண மண்டபத்தை அரசுக்கு ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே கமல் தனது எல்டாம்ஸ் சாலை வீடும் தற்போது கட்சி அலுவலகமாக செயல்படும் இடத்தை அரசாங்கத்தை பயன்படுத்தி கொள்ள சொன்ன நிலையில் தற்போது பலரும் தங்கள் இடங்களை தர முன் வந்துள்ளது அரசுக்கு வலு சேர்க்கும் விதமாக உள்ளது.

Similar News