வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் உடலை தோளில் சுமந்து சென்றார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்! #PulwamaAttack

வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் உடலை தோளில் சுமந்து சென்றார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்! #PulwamaAttack

Update: 2019-02-15 12:32 GMT

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் அஞ்சலி செலுத்தியது மட்டுமல்லாமல் அவர்களின் உடலை மற்ற வீரர்களுடன் சேர்ந்து தூக்கி சென்றது அனைவர் கண்ணிலும் நீர் கசியச் செய்தது.


புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 45 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.


இதனிடையே, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று அதிகாலை ஸ்ரீநகர் சென்றடைந்தார். அங்கு, வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அவர் நேரில் அஞ்சலி செலுத்தினார். அதோடு, ராணுவ வீரர் ஒருவரின் சடலத்தையும் அவர் தனது தோளில் சுமந்து சென்றார்.




https://twitter.com/rajnathsingh/status/1096353988629409793


புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Similar News