பிரச்சனைகள் குறித்து விவாதிக்க தயாரா? ராகுல், பிரியங்காவுக்கு ஸ்மிருதி இரானி சவால்!

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் முக்கிய பிரச்சனைகள் பற்றி பேசுவதில்லை என குற்றம் சாட்டிய காங்கிரசுக்கு ஸ்மிருதி இரானி ஒரு சவால் விடுத்துள்ளார்.

Update: 2024-05-10 14:39 GMT

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் முக்கிய பிரச்சினைகளைப் பற்றி பேசுவதில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க தயாரா? என்று ராகுல் காந்தி, பிரியங்காவுக்கு மத்திய மந்திரியும் அமேதி தொகுதி பாஜக வேட்பாளருமான ஸ்மிருதி இரானி சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நான் அவர்களுக்கு சவால் விடுகிறேன் பா.ஜனதாவுடன் எந்த பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க தயாரா? இதற்கான டிவி சேனல், தொகுப்பாளர் இடம், நேரம் ஆகியவற்றை அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம் .ஒரு பக்கம் அண்ணன் தங்கை ஜோடியும் இன்னொரு பக்கம் பா.ஜனதாவின் செய்தி தொடர்பாளர்களும் இருப்பார்கள். எல்லாம் தெளிவாகிவிடும். எங்கள் கட்சியிலிருந்து சுதான் சு திரிவேதி போதும் அவர்களுக்கான பதிலை கொடுப்பார். இவ்வாறு ஸ்மிருதி இராணி கூறியுள்ளார் .

கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் அமேதி தொகுதியில் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தியை ஸ்மிருதி இரானி தோற்கடித்தார். அதே நேரத்தில் வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். ராகுல் காந்தி இந்த முறை வயநாடு ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார்.


SOURCE :Dinaseithi

Similar News