தனது பாடலை ரீமிக்ஸ் செய்ததால் உச்சக்கட்ட கோவத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்.!

தனது பாடலை ரீமிக்ஸ் செய்ததால் உச்சக்கட்ட கோவத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்.!

Update: 2020-04-10 06:37 GMT

ஒரு பாட்டு வெற்றியடைந்து விட்டால் அதை ரீமிக்ஸ் செய்கிறேன் என்ற பெயரில் அந்த பாடலை கெடுப்பது பாலிவுட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்வு. ரீமிக்ஸ் கலாச்சாரம் குறித்துப் பல இசையமைப்பாளர்களும் கண்டனம் தெரிவித்தும் பாலிவுட் திருந்துவதாக இல்லை. அப்படி அவர்கள் சமீபத்தில் செய்த ரீமிக்ஸ் எப்போதும் அமைதியின் உருவகமாக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானையே கோவத்தில் உச்சிக்குத் தள்ளியுள்ளது.

2009ம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படம் 'டெல்லி 6'. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இதில் அவர் மெட்டமைத்த 'மசக்களி' என்ற பாடல் பெரும் வெற்றி பெற்ற பாடலாகும். தற்போது இதனை ரீமிக்ஸ் செய்கிறேன் என்ற பெயரில் குதறி வைத்துள்ளனர். இதனால் கோவத்தின் உச்சிக்கே சென்ற ஏ.ஆர்.ரஹ்மான், சமூக வலைத்தளங்களில் தனது கோவத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

மேலும் கடின உழைப்பில் உருவான அசலான பாடலை கேளுங்கள் எனத் தான் மெட்டமைத்த 'மசக்களி' பாடலையும் பகிர்ந்துள்ளார். இவ்வளவு அமைதியான ரஹ்மானையே கோவபடுத்தி விட்டார்களே என்ற ஆதங்கப்படுகிறார்கள் அவர் ரசிகர்கள். 

Similar News