பாகிஸ்தானில் தக்காளி கிலோ ரூ.300! இந்தியர்கள் ஏற்றுமதி செய்ய மறுப்பு!!

பாகிஸ்தானில் தக்காளி கிலோ ரூ.300! இந்தியர்கள் ஏற்றுமதி செய்ய மறுப்பு!!

Update: 2019-08-11 11:58 GMT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த 370 வது பிரிவை நீக்கியதால் பாகிஸ்தான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது. இந்தகோபத்தில், அவர்கள் இந்தியாவுடனான வணிக உறவை முறித்துக் கொண்டனர். ஆனால், இந்த முடிவு பாகிஸ்தானில் பீதியைஉருவாக்கியுள்ளது.


இந்திய விவசாயிகளும், வர்த்தகர்களும் தங்கள் பொருட்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய மறுத்து விட்டனர். இதன் காரணமாக,பாகிஸ்தானில் தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு 300 ரூபாயை எட்டியுள்ளது.




https://youtu.be/1ecYVCCwrgM


இந்தியாவுடனான வணிக உறவை முறித்துக் கொண்ட பாகிஸ்தானில் தக்காளி மற்றும் காய்கறிகளின் விலைகள் கிடு கிடு எனஉயர்ந்துள்ளன. உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட பெரும்பாலான பச்சை காய்கறிகளின் விலையும் அங்கு உயர்ந்துள்ளன.அதாவது பெரும்பாலான காய்கறிகளின் விலை இரட்டிப்பாகியுள்ளது. பாகிஸ்தானின் காய்கறி சந்தையிலும் உருளைக்கிழங்கு விலைஅதிகரித்துள்ளது.


பாகிஸ்தானுக்கு 100-க்கும் மேற்பட்ட  பொருட்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.


தக்காளி வர்த்தக சங்கத் தலைவர் அசோக் கோசிக் கூறுகையில், “இங்குள்ள அட்டாரி-வாகா எல்லையில் இருந்து தினமும் 75 முதல் 100லாரிகள் தக்காளி சென்று கொண்டிருந்தன. ஆனால் தற்போது அது நிறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல பிற காய்கறிகள், பழங்கள், பருத்தி மற்றும் நூல் போன்றவற்றை ஏற்றுமதி செய்யும் வர்த்தகர்களும் பாகிஸ்தானுக்கு பொருட்களை அனுப்புவதை நிறுத்திஉள்ளனர்” என்று கூறினார்.


பாகிஸ்தானுக்கு அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை ஏற்றுமதி செய்யும் டெல்லி ஆசாத்பூர் சந்தையில் உள்ள வியாபாரிகள்,பாகிஸ்தானுக்கு பொருட்களை அனுப்ப வேண்டாம் 


என்று முடிவு செய்துள்ளனர். 


பாகிஸ்தான் பெரும்பாலும் இந்தியாவிலிருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதால், இந்தியாவைத்தவிர கிட்டத்தட்ட எல்லாநாடுகளுடனும் பாகிஸ்தானின் இறக்குமதி ஏற்கனவே எதிர்மறையான வளர்ச்சியில் உள்ளது.


Similar News