சாம் பிட்ரோடா சர்ச்சை கருத்து-காங்கிரஸ் உடனான உறவை முறித்துக் கொள்வீர்களா? ஸ்டாலின் அவர்களே!- மோடி கேள்வி

தென்னிந்தியர்களின் நிறம் குறித்த சர்ச்சை கருத்தை சாம் பிட்ரோடா வெளியிட்டு இருப்பதால் பிரதமர் மோடி ஸ்டாலினுக்கு ஒரு கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2024-05-09 10:35 GMT

இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா சமீபத்தில் அளித்த பேட்டியில் "இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் வாழ்பவர்கள் சீனர்கள் போலவும், மேற்கு பகுதிகளில் வாழ்பவர்கள் அரேபியர்கள் போலவும், வடக்கு பகுதிகளில் வாழ்பவர்கள் வெள்ளையர்கள் போலவும் ,தெற்கு பகுதிகளில் வாழ்பவர்கள் ஆப்பிரிக்கார்கள் போலவும் உள்ளனர். ஆனாலும் நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் எனக் கூறியிருந்தார்.

மக்களின் நிறம் குறித்து பிட்ரோடா இவ்வாறு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு பா.ஜ.க தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆந்திராவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், "சாம் பிட்ரோடாவின் கருத்தை சுட்டி காட்டி தமிழ்நாடு முதலமைச்சருக்கு சவால் விடுத்தார் .தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல இருப்பதாக சாம் பிட்ரோடா கூறியிருக்கிறார். எனவே தமிழர் பெருமையை காக்க காங்கிரஸ் கட்சியுடன் உறவை முறித்துக் கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் தயாராக உள்ளாரா?" என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.


SOURCE :Dinaseithi

Similar News