பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் பணியிடை நீக்கம்!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-09-30 12:59 GMT

திருவள்ளுவர் மாவட்டம் திருவேற்காடு அரசு உதவி பெறும் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு மணிக்கும் மாணவி இருவருக்கு அந்த வகுப்பு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொடர்பான சீண்டல்கள் செய்ததாகவும், ஆபாசமாக பேசி வருவதாகவும் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்கள். பெற்றோர்கள் உடனே பள்ளியை அணுகி சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி இருக்கிறார்கள்.


எனவே மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் பள்ளியின் முன் திரண்டு இருக்கிறார்கள். இதை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு இதை பள்ளியில் பணிபுரியும் மற்றொரு பெண் ஆசிரியர் மற்றும் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக ஈடுபடுவதாக தலைமை ஆசிரியரிடம் ஆசிரியர்களும், மாணவிகளும் புகார் அளித்ததாகவும் அதன் பெயரில் ஆசிரியர் குழு அமைத்து விசாரணை செய்து தற்போது அவரை பணியிடை நீக்கம் செய்ததாகவும் கூறப்படுகிறது.


தற்காலிகமாக பணி இதை நீக்கம் செய்யப்பட்டுள்ள கடிதம் ஒன்றை தற்போது ஆசிரியர் பெற்று இருக்கிறார். இதை எடுத்து பெற்றோர் பள்ளியின் முன்பு இருந்து களைந்து சென்றார்கள். மேலும் கல்வித்துறை சார்பில் இருந்து முழுமையான நடவடிக்கை எடுக்கும் வரை தொடர்ந்து தற்காலிக பணியிடை நீக்கத்தில் இருப்பார் என அந்த கடிதத்தை தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News