தமிழர் விரோத ஆபாச கறுப்பர் கூட்டத்தின் செந்தில் வாசன் கைது..!!

தமிழர் விரோத ஆபாச கறுப்பர் கூட்டத்தின் செந்தில் வாசன் கைது..!!

Update: 2020-07-16 02:32 GMT

தமிழ் கடவுள் முருகப் பெருமானின் கந்த சஷ்டி கவசத்தை மிகவும் ஆபாசமாக விமர்சித்த கறுப்பர் ஆபாச கூட்டத்தின் இழிசெயலை கண்டித்து தமிழர்கள் பொங்கி எழுந்து கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர். உலகம் முழுவதும் உள்ள தமிழ் ஹிந்துக்களின் உணர்வை புண்படுத்தியுள்ள கறுப்பர் ஆபாச கூட்டத்தின் மீது பா.ஜ.க. மற்றும் ஹிந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. 

இதனை அடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் மற்றும் நிர்வாகிகள் மீது சாதி, மத, இன ரீதியான மோதலை தூண்டுவது, அவதூறு பரப்புதல் உட்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். 

இந்நிலையில், இந்த வழக்கில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த செந்தில் வாசன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். இதையடுத்து ஆபாசமாக பேசிய சுரேந்திரன் நடராஜன் தலைமறைவாகியுள்ளார். மேலும் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். 

Similar News