ரயில்வே துறையிலும் ஊழல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை! - பியூஷ் கோயல் தகவல் !!

ரயில்வே துறையிலும் ஊழல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை! - பியூஷ் கோயல் தகவல் !!

Update: 2019-07-15 13:47 GMT


பிரிட்டனுக்கு அரசுமுறை பயணமாகச் சென்றுள்ள ரயில்வே அமைச்சர், அங்கு இந்திய மக்களுடன் உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-


பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு துறைகளிலும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்திருக்கிறது. பல ஊழல் அதிகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


ரயில்வே துறையிலும் ஊழல் அதிகாரிகள் பட்டியல் தயாராகி வருகிறது. நிறைய அதிகாரிகளின் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு பாடமாக அமையும்.


அதேபோல், பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். வங்கி பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படுகின்றன. எல்லா துறையிலும் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. மக்கள் இதை உணர உணர நாம் கண்காணிக்கப்படுகிறோம் தவறிழைத்தாலோ பணியை ஒழுங்காகச் செய்யாவிட்டாலோ பிடிபட்டுவிடுவோம் என்பது தெரியவரும்.


இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்


Similar News