திருச்சபைக்கு வந்த சிறுமியிடம் பாலியல் தொல்லை - பாதிரியாரை போக்ஸோவில் தூக்கிய போலீசார்
15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வழக்கில் கிறிஸ்தவ பாதிரியாரையும் அவரது மனைவியையும் சட்டத்தில் கைது செய்தனர்.
15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வழக்கில் கிறிஸ்தவ பாதிரியாரையும் அவரது மனைவியையும் சட்டத்தில் கைது செய்தனர்.
சென்னை ஆதம்பாக்கத்தில் 15 வயது சிறுமிக்கு பாலிய தொந்தரவு அளித்த வழக்கில் கிறிஸ்தவ பாதிரியார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவர் மனைவியும் போக்ஸோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
அம்பேத்கர் நகரில் பாதிரியார் ஷெரோடு மனோகர் என்பவர் கிறிஸ்தவ சபை நடத்தி வருகிறார். அவரது சபைக்கு வரும் 15 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை தருவதாக மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பாட்டி புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் பாதிரியார் மனோகர் மற்றும் அவர் உடந்தையாக இருந்த அவரது மனைவியையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.