மஹாராஷ்ட்ராவில் சரத் பவார் ஆடிய டபுள் கேம்! பா.ஜ.க ஆட்சி அமைக்க அவர் முன் வைத்த இரண்டு ரகசிய நிபந்தனைகள் அம்பலம்!
மஹாராஷ்ட்ராவில் சரத் பவார் ஆடிய டபுள் கேம்! பா.ஜ.க ஆட்சி அமைக்க அவர் முன் வைத்த இரண்டு ரகசிய நிபந்தனைகள் அம்பலம்!
மஹாராஷ்ட்ராவில் பாஜக அதிக இடங்களைப் பெற்று முதல் கட்சியாக வெற்றி பெற்று இருந்தாலும் கூட்டணி கட்சியான சிவசேனா வெளியேறி கொள்கைக்கு பொருந்தாத காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் கைகோர்த்தது. தற்போது தனது முதல்வர் கனவையும் நிறைவேற்றிக் கொண்டது.
முன்னதாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான அஜித்பவார் தன்பக்கம் 30 முதல் 35 எம்எல்ஏ க்கள் வரை உள்ளதாகக் கூறி பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முன்வந்தார். பாஜக முதல்வராக தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்வராக அஜித்பவாரும் பதவி ஏற்றனர்.
இந்த சம்பவத்துக்கு முன்பு வரை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தங்கள் கட்சியின் முழுமையான ஆதரவை பாஜகவுக்கு தந்து மஹாராஷ்ட்ராவில் ஆட்சி அமைக்க பாஜக மேலிடத்துடன் சில நிபந்தனைகளை விதித்தார் என்றும், ஆனால் பாஜக அந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளாததால்தான் சிவசேனா பக்கம் தாவியதாகவும் அது வரை சரத்பவார் பாஜக மற்றும் சிவசேனா 2 கட்சிகளுடன் மாறி, மாறி பேசி வந்ததாகவும் செய்திகள் வந்துள்ளன.
சரத் பவார் பாஜகவிடம் வைத்த நிபந்தனைகள் இதுதான் என ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஐ.ஏ.என்.எஸ் செய்தி ஸ்தாபனம் ஓன்று செய்தி வெளியிட்டுள்ளது:
முதலாவதாக தனது மகள் சுப்ரியா சூலே தேசிய அளவில் தீவிரமாக செயல்பட வேண்டும் என்பதற்காக விவசாயத்துறை கேபினட் அமைச்சர் துறையை விரும்பிக் கேட்டார். இரண்டாவதாக தேவேந்திர ஃபட்னாவிஸைத் தவிர வேறு யாராவது மகாராஷ்டிராவின் முதல்வராக ஆக வேண்டும் என்று அவர் விரும்பினார். இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி இரு கோரிக்கைகளையும் நிராகரித்தார்.