அதிர்ச்சி : ராகுல் காந்தியின் பேச்சை மொழிபெயர்த்தவர் மயக்கமடைந்தார்..!
அதிர்ச்சி : ராகுல் காந்தியின் பேச்சை மொழிபெயர்த்தவர் மயக்கமடைந்தார்..!
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பி-யுமான ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். கோவையில் நேற்று ராகுல் காந்தி பேசியதை கே.எஸ் அழகிரி மொழிபெயர்த்தார். ராகுல் காந்தி பேசியதை மொழிபெயர்க்க திக்குமுக்காடினார் கே.எஸ்.அழகிரி. அதன் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது.
Bravo Rahul Gandhi ji, brilliant stuff. 👍👏👏👏👏👏 pic.twitter.com/DvHKPWhsyc
— Vishwatma 🇮🇳 (@HLKodo) January 23, 2021
இதனை அடுத்து இன்று ஈரோடு அருகே ஓடாநிலையில் ராகுல் காந்தி பேசினார். ஓடாநிலை தீரன் சின்னமலை மணிமண்டபம் வளாகத்தில் நெசவாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். அவர் பேசியதை மொழிபெயர்த்த கல்லூரி பேராசிரியர் முகமது இம்ரான்(35) மயக்கமடைந்துள்ளார். அவர் மயக்கமடைந்ததை அடுத்து அவசர ஊர்தியின் உதவியுடன் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
#RahulGandhi ஓடாநிலையில் ராகுல் காந்தியின் பேச்சை மொழிபெயர்த்தவர் திடீர் மயக்கம் https://t.co/Ur9xxRZmBQ
— dinakaranonline (@dinakaranonline) January 24, 2021
இதனை அடுத்து வேலை பழுவினால் இது நடந்திருக்க கூடும் என்ற கருத்து சமூக வேலைத்தளங்களில் பரவி வருகிறது.
Job Stress ☹️ https://t.co/r8NtOI6BAi
— Vishwatma 🇮🇳 (@HLKodo) January 24, 2021