இனி எந்த நாட்டையும் நாங்கள் எதிர்பார்க்கப்போவதில்லை : கோல் இந்தியா - என்.எல்.சி இணைந்து 3000 மெகாவாட் சூரியஒளி மின்னுற்பத்தி செய்யத் திட்டம்!

இனி எந்த நாட்டையும் நாங்கள் எதிர்பார்க்கப்போவதில்லை : கோல் இந்தியா - என்.எல்.சி இணைந்து 3000 மெகாவாட் சூரியஒளி மின்னுற்பத்தி செய்யத் திட்டம்!

Update: 2020-07-06 09:26 GMT

இந்திய பொதுத்துறை நிறுவனங்களான கோல் இந்தியா மற்றும்  என்.எல்.சி ஆகிய நிறுவனங்கள் கூட்டாக  இணைந்து சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3000 மெகாவாட் சூரிய ஒளி மின்னுற்பத்தித் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளன.

மொத்தமாக 5000 மெகாவாட் மின்உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில், கோல் இந்தியா - என்எல்சி ஆகியன இணைந்து சூரிய ஒளி மின், அனல் மின் திட்டங்கள் மூலம் இந்த இலக்கை எட்ட திட்டமிட்டுள்ளன.

இதில் 2000 மெகாவாட் மின்சாரம் அனல் மின்னுற்பத்தித் திட்டமாகும். சூரிய ஒளி மின் திட்டத்தில் 3000 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக ஒரு கூட்டு நிறுவனத்தைத் தொடங்குவதற்கான செயல்பாடு நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி சூரிய ஒளி மின்னுற்பத்தி முறையில் மெகாவாட் மின்னுற்பத்தி செய்ய வேண்டும் என்றால் சுமார் 4 கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும்.

இதனை கணக்கில் கொண்டு  இரு நிறுவனங்களும் மொத்தமாக12 ஆயிரம் கோடி ரூபாயை இந்தத் திட்டத்துக்காக முதலீடு செய்ய உள்ளன. 

Similar News