உருவாகிறது சூது கவ்வும் இரண்டாம் பாகம்.!
உருவாகிறது சூது கவ்வும் இரண்டாம் பாகம்.!
'அட்டக்கத்தி' படத்தில் துவங்கி தற்போது வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் 'டைட்டானிக்' வரை திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனத்தின் படங்கள் அனைத்துமே வித்தியாசமான கதை களத்தை கொண்ட படமாகவே இருக்கும். இந்த 10 ஆண்டுகளில் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்க்கு நகர்த்தியதில் முக்கிய பங்கு வகுக்கும் தயாரிப்பாளர் CV குமார் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.
'இன்று நேற்று நாளை' படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு வெளியிட்டவரிடம் ரசிகர்கள் தெகிடி, சூது கவ்வும் படங்களின் இரண்டாம் பாகம் வருமா என்ற கேள்வி எழுப்பினர். அதற்க்கு இரண்டு படங்களின் அடுத்த பாகத்தின் திரைகதையும் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் விரைவில் அது குறித்த அதிகார்வபூர்வ அறிவிப்பு வெளியிடப்படம் எனவும் தெரிவித்துள்ளார்.