குணமடைந்தவர்களில் பலருக்கு மீண்டும் கொரோனா.. அதிர்ச்சியில் தென் கொரியா..

குணமடைந்தவர்களில் பலருக்கு மீண்டும் கொரோனா.. அதிர்ச்சியில் தென் கொரியா..

Update: 2020-04-08 04:16 GMT

கொரோனா வைரஸ் சீனாவின் ஊஹான் நகரத்தில் தோன்றி இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. வல்லரசு நாடுகளே இதை எப்படி தடுப்பது என்பதை தெரியாமல் திகைத்து நிற்கிறது. இதை கையாள்வதில் தென் கொரியா சிறந்து விளங்கியது.

தென்கொரியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான டாயிகு, இங்கு கொரோனா தாக்கம் அதிகமாக இருந்தது. இங்குள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த 51 பேர் குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு அண்மையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னர், அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து மருத்துவ பரிசோதனை செய்தபோது மீண்டும் கொரோனா இருப்பது தெரிய வந்தது. இதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியாகி உள்ளனர்.

மனித உடலில் பல்லாயிரம் கோடி செல்களில், ஏதோ ஒரு செல்லில் கொரோனா தாக்கம் இன்னும் உள்ளது. குணம் அடைந்தவர்களை கொரோனா மீண்டும் தீவிரமாக தாக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

Similar News