நீட் தேர்வு எழுத வெளி மாநிலத்திற்கு செல்லும் நிலை தமிழக மாணவர்களுக்கு இனிமேல் ஏற்படாது: அமைச்சர் செங்கோட்டையன்

நீட் தேர்வு எழுத வெளி மாநிலத்திற்கு செல்லும் நிலை தமிழக மாணவர்களுக்கு இனிமேல் ஏற்படாது: அமைச்சர் செங்கோட்டையன்

Update: 2019-02-19 17:57 GMT

இந்தாண்டு தமிழகத்தில் நீட் தேர்வு எழுத 561 மையங்கள் தயார் நிலையில் உள்ளது என்றும் ஒரு மாணவர் கூட வெளி மாநிலம் சென்று தேர்வு எழுதும் நிலை வராது என்றும் நெல்லையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார் .


தொடர்ந்து பேட்டி அளித்த செங்கோட்டையன், இந்தியாவில் 80 லட்சம் பேருக்கு வேலை இல்லை, தமிழ்நாட்டில் ஒரு லட்சத்தி 60 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை. இந்த நிலை மாற பல்வேறு அதிரடி நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இனி வரும் காலங்களில் 12 ஆம் வகுப்பு படித்தாலே போதும் வேலை பெறும் நிலையை உருவாக்கித் தர முடியும். அதற்கான பயிற்சி வகுப்புகள் இந்த ஆண்டு தொடங்க உள்ளது என தெரிவித்து உள்ளார் 


நீட் தேர்விற்கு 16 ஆயிரம் மாணவர்களுக்கு 41 பயிற்சி மையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் +2வில் முதன்மை மதிப்பு பெறும் 4 ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு 10 கல்லூரிகளில் 20 நாட்களுக்கு முழு பயிற்சி அளிக்கப்படும். இதே போன்று தமிழகத்தில் ஆடிட்டர் வேலை வேலைக்கான வாய்ப்பு  அதிகமாக உள்ளது. இதனால் +2 வில் வணிகவியல் பயிலும் மாணவர்களுக்கு சிஏ விற்கான சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்து உள்ளார்.


இதெல்லாம் தவிர்த்து, வரும் கல்வி ஆண்டு முதல் 8,9,10ம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணியை வழங்க மத்திய அரசை அணுகி இருக்கிறோம். நீட் தேர்வு கடந்த ஆண்டை போல் இல்லாமல் இந்தாண்டு தமிழகத்தில் நீட் தேர்வு எழுத 561 மையங்கள் தயார் நிலையில் உள்ளது.  ஒரு மாணவர் கூட வெளி மாநிலம் சென்று தேர்வு எழுதும் நிலை வராது என செங்கோட்டையன் அதிரடியாக தெரிவித்து உள்ளார்.


Similar News