இந்தியை திணிக்கும் மு.க.ஸ்டாலினின் “சன் சைன்” பள்ளிகள் முன்பு போராட்டம்!!

இந்தியை திணிக்கும் மு.க.ஸ்டாலினின் “சன் சைன்” பள்ளிகள் முன்பு போராட்டம்!!

Update: 2019-09-16 10:40 GMT
பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மு.க. ஸ்டாலின் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தபோவதாக கூறி உள்ளார்.
நான், சென்னை வேளச்சேரியில் உள்ள ஸ்டாலின் குடும்பம் நடத்துகின்ற “சன் சைன் மாண்ட்டி சோரி” மற்றும் “சன் சைன் ஹையர் செகண்டரி” பள்ளிகள் முன்பு போராட்டம் நடத்துவேன். இந்தி திணிப்பு செய்வது ஸ்டாலின் குடும்பம்தான்.
இதேபோல், தி.மு.க. மூத்த தலைவர் அன்பழகனின் பேரன் நடத்தும் சி.பி.எஸ்.இ பள்ளியில் தமிழில் பேசினால் அபராதம் விதிப்பதை எதிர்த்து நான் போராட்டம் நடத்த உள்ளேன்.
இவர்கள் எல்லோரும் தமிழ் உணர்வாளர்கள் அல்ல. தமிழ் விரோதிகள் என்பதுதான் உண்மை.
தி.மு.க. முக்கிய தலைவர்கள் நடத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் பட்டியலை சென்ற ஆண்டே வெளியிட்டுள்ளேன். அந்த 45 பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை எடுத்துவிட்டு, இவர்கள் சொல்லும் சமச்சீர் கல்வியை நடத்த வேண்டும்.
இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்.

Similar News