மீண்டும் இணையும் சுந்தர் சி - விஷால் ஜோடி!

மீண்டும் இணையும் சுந்தர் சி - விஷால் ஜோடி!

Update: 2020-04-03 11:17 GMT

கடந்தன் 2013-ஆம் ஆண்டு முதன் முதலில் சுந்தர் சி - விஷால் இணைந்த படம் 'மத கஜ ராஜா'. அப்படத்தினை தயாரித்த ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதால் அப்படம் இன்று வரை வெளியாகவில்லை. அப்படத்தில் நடித்த போது சுந்தர் சியுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக தனது தயாரிப்பு நிறுவனத்தில் சுந்தர் சியுடன் 'ஆம்பள' படத்தின் மூலம் இணைந்தார் விஷால். அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு 'ஆக்ஷ்ன்' படத்திற்காக மூன்றாவது முறை இணைந்தது இந்த கூட்டணி. முந்தைய படங்களை போல் அல்லாமல் இப்படத்தினை பெரும் பொருட்செலவில் ஆக்ஷன் படமாக இயக்கியிருந்தார் சுந்தர் சி. ஆனால் அப்படம் தோல்வியடைந்ததையடுத்து அதன் தயாரிப்பாளரான ட்ரைடண்ட் ஆர்ட்ச் ரவீந்திரனுக்கு மீண்டும் ஒரு படம் செய்து தருவதாக உறுதியளித்திருந்தனர் விஷால் மற்றும் சுந்தர் சி.

தற்போது அரண்மனை 3 படத்தின் வேலைகளில் இருக்கும் சுந்தர் சி, அதனை தொடர்ந்து மீண்டும் விஷாலுடன் இணையவிருக்கிறாராம். ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமே இதனை தயாரிக்கும் எனவும், சுந்தர் சியின் அக்மார்க் நகைச்சுவை படமாக இது உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Similar News