தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு சொகுசு ரயில் - மோடி சர்க்கார் அதிரடி!
தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு சொகுசு ரயில் - மோடி சர்க்கார் அதிரடி!
தாம்பரம் - நாகர்கோவில் இடையே தரம் உயர்த்தப்பட்ட சொகுசு ரயில் சேவை நேற்று(8 மே, புதன்) தொடங்கியது.
குஷன் இருக்கைகள், வைஃபை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த ரயலில் இடம் பெற்றுள்ளன. தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளிலும் நாகர்கோவிலில் இருந்து தாம்ப்ரத்திற்கு செவ்வாய், புதன், வியாழன் கிழமைகளிலும் இந்த ரயில்கள் இயக்கப்படும்.
சென்னை கோட்ட மூத்த பிரிவு பொறியாளர் ராமன் ரயிலின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சொகுசு ரயிலில் பயணிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். தென் தமிழகத்திற்கு மத்திய மோடி சர்க்கார் தனி கவனம் செலுத்தி பல ரயில் திட்டங்களை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.