ஊரடங்கை பயன்படுத்தி புதுச்சேரியில் கோவில் உண்டியலை கொள்ளையடித்த மர்ம நபர்.!

ஊரடங்கை பயன்படுத்தி புதுச்சேரியில் கோவில் உண்டியலை கொள்ளையடித்த மர்ம நபர்.!

Update: 2020-04-09 03:55 GMT

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க கோவில்களில் பூஜை நடத்தப்படாமல் அடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே புதுச்சேரி அருகே உள்ள அபிஷேகபாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே விநாயகர் கோவில் உள்ளது.

கொரோனா காரணமாக சாலையோரத்தில் இருக்கும் இக்கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூஜை செய்யப்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த ஞாயிறு நள்ளிரவில் கோவிலில் இருந்த உண்டியலின் பூட்டை உடைத்து அதிலிருந்து பணத்தை கொள்ளையடித்த சென்றான்.

அந்த வீடியோ அருகில் இருந்த கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவியில் பதிவானது மேலும் கொள்ளை சம்பவம் தொடர்பாக தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிசிவி காட்சியை கொண்டு தேடி வருகின்றனர்.

Similar News