அரசியலை தாண்டிய மனிதநேயம்.. ரஜினியின் செயலை பாராட்டும் பாதுகாப்பு போலீசார்.!

அரசியலை தாண்டிய மனிதநேயம்.. ரஜினியின் செயலை பாராட்டும் பாதுகாப்பு போலீசார்.!

Update: 2020-12-09 17:26 GMT

"என்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் தெய்வங்களாகிய...." என்றுதான் ரஜினி, தான் எங்கு பேச துவங்கினாலும் முதல்வரியாக ஆரமிப்பார். அந்தளவிற்கு தமிழக மக்கள் மீதும், தன் ரசிகர்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர். அதே வார்த்தைகளால் மட்டுமல்ல செயல்களாலும் செய்து காண்பித்துள்ளார்.

குடிநீர் கிடைக்காத போது ரஜினி மக்கள் மன்றத்தின் மூலமாக குடிநீர், கஜா புயல் பாதிப்பின் போது மக்களுக்கு உணவு, உடை என உதவிகள் என்று இடர் வரும்போதெல்லாம் தன்னால் முடிந்தளவு உதவிகளை செய்து  வந்துள்ளார். 

இந்த நிலையில் ஜனவரி மாதம் 3ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் அது குறித்த அறிவிப்பை டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பேன் எனவும் தெரிவித்திருந்தார். இதனிடையில் அவருடைய இல்லத்திற்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. 12 போலீசார் தினசரி அதே பணியில் ஈடுபடுகின்றனர்.

இச்சூழலில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவரும் போலீசாருக்கு நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திலிருந்து உணவு வழங்கப்படுகிறது. தினசரி மதியம் போலீசாருக்கு உணவு வழங்கியதற்குப் பின்னர், மாலை நேரங்களில் தேநீர்  வழங்கப்படுகிறது. பாதுகாப்பு பணிக்கு பல்வேறு இடங்களுக்கு சென்றாலும் இது போல் எங்கேயும் கண்ணியமாக நடத்தியதில்லை என்று போலீசார் பெருமிதத்துடன் கூறுகின்றனர்.

Similar News