100 ஆண்டுகளுக்குப் பிறகு உலகத்தை ஆளப் போவது இதுதான் !!
100 ஆண்டுகளுக்குப் பிறகு உலகத்தை ஆளப் போவது இதுதான் !!
இந்த உலகத்தைப் பற்றிய நமது கணக்கீடுகள் தொடர்ந்து தவறுகிறது. இன்னும் நூறாண்டுகளில் விஞ்ஞான வளர்ச்சி நம் கற்பனைக்கும் எட்டாத உயரத்தில் நிலை பெற்றிருக்கும். அந்த உலகத்தோடு நம்மால் ஒத்துப் போக முடியுமா? வளர்ச்சி இருக்கட்டும். வாழ்வாதாரம் என்ன ஆகும்? இன்று கணினி அபரிமிதமான வளர்ச்சியை நமக்கு தந்திருப்பது போல வேலைவாய்ப்புகளையும் அளித்திருக்கிறது. ஆனால், இந்நிலை தொடராது. எதிர்காலத்தை ஆள இருப்பது கணினி மட்டுமல்ல. அதற்கும் மேலே ஒரு ராட்சசன் இருக்கிறது. எதிர்காலத்தில் கணினித்துறையில் வேலைபார்க்கும் மக்களில் 75% மக்கள் தங்கள் வேலையே இழக்க இருக்கிறார்கள்.
ராட்சசன்
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்னும் துறை பற்றி படித்திருக்கிறீர்களா? அதைக் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றன. இதனை அடிப்படையில் தரம் உயர்த்தப்பட்ட கணினி என்று சொல்லலாம். எவ்வளவு தரம் உயர்த்தப்படும் என்பதில் தான் விஷயம் இருக்கிறது. இன்று ரோபோக்களுக்கு கட்டளை கொடுக்கப்பட்டு செயல்படுத்த வைக்கிறார்கள். செயற்கை நுண்ணறிவு ரோபோக்களை இயங்க வைக்கும். சூழல் சார்ந்த முடிவுகளை மனிதன் எடுப்பது போல் அவையும் நடந்து கொள்ளும். ரோபோக்களுக்கு உள்ளே ஒரே செயலுக்கு பல கட்டளைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றிலிருந்து சரியான, துல்லியமான முடிவை நோக்கிச் செயல்படும். மிகச் சிக்கலான வேலைகளைக் கூட இதன் மூலம் செய்து முடிக்க ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இன்று மனிதர்கள் பார்க்கும் தகவல் உள்ளீடு, சரிபார்த்தல், திருத்துதல் ஆகியவற்றை எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் ரோபோக்கள் செய்துவிடும். இன்று நூறு மனிதர்கள் செய்யும் வேலையினை அதை விடத் துல்லியமாக ஒரே கணினி செய்கிறதல்லவா? அதே போல் ஆயிரம் கணினிகளுக்கான கட்டளைகளை அளித்து பணி முடிக்கும் திறன் செயற்கை நுண்ணறிவு மூலம் சாத்தியமாக்கப்படும். அப்படியென்றால் மனிதர்களுக்கு வேலை? அங்குதான் வருகிறது பிரச்சனை.