சாத்தான்குளம் சம்பவம், விரைவான நீதி கிடைக்க பா.ஜ.க துணை நிற்கும் - எல்.முருகன்.! #Tnbjp #Lmurugan #sathankulam
சாத்தான்குளம் சம்பவம், விரைவான நீதி கிடைக்க பா.ஜ.க துணை நிற்கும் - எல்.முருகன்.! #Tnbjp #Lmurugan #sathankulam
பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறி இருப்பதாவது:
சாத்தான்குளம் வணிகர்கள் ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் இருவருடைய மரணம் தமிழகத்தில் அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கி றது. தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த மரணங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. கோடிக்கணக்கான வணிகர்கள் மீதான காவல்துறையின் பார்வை இதில் அடங்கியுள்ளது. இந்த சம்பவத்தில் குற்றம் புரிந்தோர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்த சூழ்நிலையில் சாத்தான்குளம் சம்பவம் தமிழக போலீஸ் துறைக்கு ஏற்பட்ட களங்கம் ஆகும். நேர்மையான விசாரணை, குற்றவாளிகளுக்கு கிடைக்கும் உரிய தண்டனை இதன் மூலம் தான் இந்த களங்கம் துடைக்கப்படும். ஜெயராஜ் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சம்பவத்துக்கு விரைவான நீதி கிடைக்கும் வகையில் அந்த குடும்பத்தினருக்கு பா.ஜ.க. துணை நிற்கும்
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.