மரண பயம் போக்கும் நரசிம்மர் - பக்தருக்கு நலம் தர அவர் கொண்ட அவதாரம் எத்தனை தெரியுமா?
மரண பயம் போக்கும் நரசிம்மர் - பக்தருக்கு நலம் தர அவர் கொண்ட அவதாரம் எத்தனை தெரியுமா?
நலம் தரும் நரசிம்மர் வழிபாடு .
விஷ்ணுவின் அவதாரங்களிலேயே மிக உக்கிரமான அவதாரம் நரசிம்ம அவதாரம் . இமயவாத மலையில் நரசிம்மர் அவதரித்ததாக ஹரி வம்சம் கூறுகிறது . நரசிம்மருக்கு அவரின் தோற்றத்தையும் ஆயுதங்களையும் கொண்டு 74 வடிவங்கள் உள்ளதாக கூறப்படுகிறது . அதில் உக்ர நரசிம்மர் க்ரோத நரசிம்மர் வீர நரசிம்மர் விளம்ப நரசிம்மர் கோப நரசிம்மர் யோக நரசிம்மர் அகோர நரசிம்மர் அதர்சன நரசிம்மர் மற்றும் லஷ்மி நரசிம்மர் என முக்கியமாக 9 நரசிம்மர்கள் உண்டு
இதில் லஷ்மி நரசிம்மர் தவிர மற்ற நரசிம்மர்கள் பூசைக்கு பெரும்பாலும் பிரம்மசாரிகளே அனுமதிக்கபடுவார்கள் . லஷ்மி நரசிம்மர் மட்டும் கொஞ்சம் சாந்தமாக காட்சி அளிப்பார் . நரசிம்மர் பயத்தை போக்குபவர் . துஷ்ட சக்திகளின் பிடியிலிருந்து நம்மை உடனடியாக காப்பாற்றும் சக்தி நரசிம்மருக்கு உண்டு . இவரது மந்திரங்கள் தொடர்ந்து ஜெபித்தால் நமக்கு ஒரு கவசம் போல நம்மை சுற்றி பாதுகாக்கும் .
நரசிம்மர் எந்த அளவு கோபம் கொண்டவரோ அதே அளவு இரக்கம் கொண்டவராவார் . பக்திக்கு கட்டுப்பட்டவர் என்பதாலேயே பிரகலாதன் அழைத்தவுடன் வந்தார் . ஒரு செவ்வாய் கிழமையை தேர்ந்தெடுத்து நரசிம்மர் படத்திற்கு முன் மஞ்சள் உடை அல்லது வஸ்த்திரம் அணிந்து அமர்ந்து கொள்ள வேண்டும் முன்பு ஒரு நெய் விளக்கை ஏற்றி கொள்ள வேண்டும் .
உக்ரம் வீரம் மகா விஷ்ணுவெம் ஜ்வலந்தம் சர்வோ முக்தம் நரசிம்மம் பீஷனம் ம்ரித் யுர் ம்ரித்யும் நமாம்யஹம் . என்கிற மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும். இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்வதால் எந்த திருஷ்டி இருந்தாலும் விலகும் . செவ்வரளி மற்றும் செம்பருத்தி மலர்களை நரசிம்மருக்கு அணிவிக்கலாம் அது அவருக்கு மிகவும் பிடிக்கும் . அவரை வழிபட வழிபட குடும்ப சண்டைகள் முடிவுக்கு வரும். நரசிம்மருக்கு விரதம் இருப்பவர்கள் பால் பொருட்களை கண்டிப்பாக தவிர்க வேண்டும்