ட்விட்டரை தெறிக்கவிடும் #இபாஸ்_எங்க_உதய் ஹேஷ்டேக் #UdhayStalin #Trending
ட்விட்டரை தெறிக்கவிடும் #இபாஸ்_எங்க_உதய் ஹேஷ்டேக் #UdhayStalin #Trending
தி.மு.க'வின் பட்டத்து இளவரசர் உதயநிதி'யை சாத்தான்குளம் சென்ற விவகாரத்தில் இ-பாஸ் கேட்டு #இபாஸ்_எங்க_உதய் என்ற ஹேஷ் டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
அரசியல், சினிமா போன்ற பிரபலங்களின் செயல்களை இணையவாசிகள் நன்றாக இருந்தால் பாராட்டுவார்கள், அதே நேரத்தில் வழக்கத்திற்க்கு மாறாகவோ அல்லது திமிராகவோ, அல்லது உண்மைக்கு புறம்பாகவோ பேசினால் கண்டிப்பாக நெட்டிசன்களிடம் சிக்கி சின்னாபின்னமாக வேண்டியதுதான். அந்த வகையில் தமிழகத்தில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் இணையவாசிகளிடம் விமர்சனத்துக்கு உள்ளாவது தி.மு.க'வேதான் அதிலும் குறிப்பாக கட்சியின் தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி'யின் செயல்பாடுகள் அவரே வந்து என்னை கலாய்த்து விடுங்கள் இணையவாசிகளே என்ற வகையில்தான் இருக்கும்.
வாண்டடாக வந்து கருத்து கூறுவார், பிரபலங்களை மதிக்க மாட்டார், 45 வயதில் நான்கு புத்தகங்களை படித்துவிட்டு வாழ்நாள் பூராக புத்தகப்புழுவாக திரிந்த மாதிரி பிதற்றுவார். அந்த வகையில் சாத்தான்குளம் படுகொலை சம்பவம் தொடர்பாக அவர்களின் குடும்பத்திற்க்கு ஆளுதல் கூறுகிறேன் பேர்வழி என்று இ-பாஸ் கூட இல்லாமல் ஆர்வக்கோளாறில் சென்று விட்டார் அதை கண்டுகொண்ட நெட்டிசன்கள் முதல் அரசியல் கட்சியினர் வரை எங்கே இ-பாஸ் என்று கேட்க ஆரமித்துவிட்டனர். இதனால் அமைதியான உதயநிதிக்கு ரஜினி ரசிகர்கள் மூலம் வந்தது வினை.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விமர்சிக்க அரசியலில் கரைகண்ட மு.கருணாநிதியே சற்று தயங்குவார். முடிந்தவரை ரஜினியை பக்கத்தில் வைத்து அழகு பார்ப்பார் ஏனெனில் ரஜினி அவர்களின் ரசிகர் பலமும் தி.மு.க'வின் பலவீனமும் நன்கு அறிந்தவர் மு.கருணாநிதி ஆனால் பேரனோ ரஜினியின் உயரம் மட்டுமல்ல தன் உயரமே தெரியாமல் அவரை அவ்வபோது குறிப்பிட்டு பேசி வந்தது அவரின் ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. இந்த நிலையில் ரஜினி அவர்கள் கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்க்கு சென்று வந்ததை விமர்சிக்கும் விதமாக எங்கே இ-பாஸ் என்று கேட்டு உடன்பிறப்புகள் முதல் தி.மு.க'வின் அறிவிக்கப்படாத தொண்டனாக வலம்வரும் சில மீடியா ஆட்கள் வரை விமர்சித்தனர் ஆனால் ரஜினிகாந்த் அவர்களின் இ-பாஸ் நேற்று மீடியாக்களினால் வெளியிடப்பட்டதையடுத்து அவரின் ரசிகர்களும் தமிழக நெட்டிசன்களும் எங்கே அவர் காமிச்சுட்டார் நீங்கள் சாத்தான்குளம் போய் வந்த இ-பாஸ் காமியுங்கள் என கேட்டு வருகிறார்கள். உதயநிதியோ வழக்கம்போல் வேறு யாரையோ கேட்கிறார்கள் என சத்தமில்லாமல் இருக்கிறார்