இந்தியாவின் கோரிக்கையால் போர் நிறுத்தம் அறிவித்த ரஷ்யா - உலக அரங்கில் உச்சம் தொட்ட பாரதம்!

Update: 2022-03-05 07:20 GMT

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க தற்காலிக போர் நிறுத்தம் செய்ய இந்தியா கேட்டுக்கொண்டதையடுத்து, மக்களை மீட்க ஏதுவாக போர் நிறுத்தம் செய்வதாக ரஷ்யா அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி, இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பதற்காக இரு நாட்டு படைகளிடமும் உள்ளூர் அளவில் தற்காலிக போர் நிறுத்தம் செய்ய வேண்டுகோள் விடுத்திருப்பதாக கூறினார். 

இந்த நிலையில் மீட்பு பணிகளுக்காக உக்ரைன் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்தது. பொதுமக்கள் உள்ள பகுதிகளில் மீட்புப் பணிக்காக மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தம் செய்வதாக தெரிவித்துள்ளது. 


Similar News